முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஓபிஎஸ் நிதானம் இழந்து விரக்தியின் உச்சத்தில் அதிமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதி துறையை பறித்துக் கொண்டவர் ஓபிஎஸ் தான் பிக் பாக்கெட். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என்று சொன்னவர் ஓபிஎஸ் தான் என்றார். மேலும் ஜெயலலிதா மறைந்த பிறகு இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓபிஎஸ் தான் என்றும் அதிமுகவிற்கு எதிராக செயல்பட்ட அவர் எப்போதாவது கட்சியை நலனுக்காக பேசியிருக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்