
சமூக ஊடகங்களில் தற்போது ஒரு திருமண நிகழ்வின் வீடியோ பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு திருமண விழாவின் போது விருந்தினர் அனைவரும் திறந்த வெளியில் அமர்ந்து உணவு உண்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென வானம் குளிர்ந்து மழை பெய்ய ஆரம்பிக்கிறது. கூடாரம் அமைக்கப்பட்டிருந்தாலும், மழை தண்ணீர் அதன் வழியாக கசியத் தொடங்க, விருந்தினர்கள் அனைவரும் நனைய நேரிடுகிறது. இருந்தும், பலர் தங்கள் உணவை நனையாமல் பாதுகாத்து சாப்பிட முயற்சிப்பது காணொளியில் தெளிவாக காணப்படுகிறது.
இந்த வீடியோ Instagram-இல் rkverma598 என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த செய்தி எழுதப்படும் நேரம் வரை, இந்த வீடியோ 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதற்கான வேறுவேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஒருவர் “பெண்ணின் வீட்டாரால் முதலீடு செய்யப்பட்ட பணம் இவ்வாறு வீணானது” என வருத்தம் தெரிவித்திருக்கிறார். மற்றொருவர், “மழை என்ன பிரச்சனையாக இருந்தாலும், உடற்பயிற்சி போல உணவு சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது” என நக்கல் அடித்துள்ளார்.
View this post on Instagram
இதே நேரத்தில், மற்றொரு பயனர், “இது தான் உண்மையான திருமண விருந்து, மணமகன் மணமகளை நேசிக்கிறார், விருந்தினர்கள் உணவை நேசிக்கிறார்கள்” என பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.