பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் பாஜக சார்பில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று தன்னுடைய தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பொதுமக்களிடம் ஒரு வித்தியாசமான கண்டிஷன் ஒன்றினை முன் வைத்தார். அதாவது தன்னுடைய தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வரும்போது கண்டிப்பாக ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

அதோடு நான் என்னுடைய தொகுதியில் இருக்கும் நேரத்தில் என் மக்களுக்காக நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன் எனவும் இந்த இடத்தில் என்னுடைய தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும் என்னை சந்திக்க வரும் போது என் தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என்னுடைய தொகுதியை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு தெரியவரும். அதோடு அவர்கள் தங்கள் குறைகளை பேப்பரில் எழுதிக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று கூறினார்.

மேலும் என் தொகுதி மக்கள் என்று அடையாளம் தெரிந்தால் தான் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பேன் என்றும் வேறு தொகுதி மக்களுக்கு உதவி செய்ய மாட்டேன் என்ற விதத்திலும் நடிகை கங்கனா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.