தமிழக முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அவரது தொண்டர்கள் வினோதமான முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவிர விஜய் ரசிகரான தேநீர் கடை உரிமையாளர், விஜய்யின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டும் விதமாக பொதுமக்களுக்கு இலவசமாகத் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கிக் கொண்டாடினார்.
VIDEO | Erode: Tea shop offers free tea to customers to celebrate Vijay becoming TN CM.
(Full video available on https://t.co/n147TvrpG7) pic.twitter.com/UAwhyTXHTY
— Press Trust of India (@PTI_News) May 11, 2026
சுமார் 40-50 ஆண்டுகளில் தமிழகம் பார்த்திராத ஒரு பெரும் மாற்றத்தை விஜய் கொண்டு வந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அந்த உரிமையாளர், விஜய் தனது திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சியான கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘தளபதி’ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
