இருமல் சிரப் மருந்துகளால் ஏற்பட்ட குழந்தை இறப்புகளுக்கு பின் குழந்தைகளை ஆபத்தான மருந்துகளிலிருந்து பாதுக்காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என WHO உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சமீபகாலதில் இருமல் மருந்தால் பல குழந்தைகள் இறந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

சில இருமல் சிரப்களில் அதிக அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவ தயாரிப்புகளும் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்றிருக்க வேண்டும் என WHO தெரிவித்துள்ளது.