காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பினரும் போட்டிப்போட்டு வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி ஆதரவாளரான பொங்கலூர் மணிகண்டன், “காமராஜர், கக்கனைப் போல எளிமையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் முகத்தை பார்த்தே மக்கள் வாக்களிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.