தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது பத்திரப்பதிவு முடிந்தவுடன் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை தமிழக அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது.

நிலம், வீடு போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள் அதன் பரப்பளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும். https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தேவையான தகவல்களை உள்ளீடு செய்து ஆன்லைன் பட்டாவை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.