தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், கடந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற அண்ணா பல்கலை., திட்டமிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலை., முடிவு செய்துள்ளது. மேலும், உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.