கேரளாவில் அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளம் கேரளாவின் சேவை மற்றும் புதிய நிர்வாக களஞ்சியம் என்ற மென்பொருள் மூலமாக கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மென்பொருளில் ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் SPARK அப்ளிகேஷனை அணுகும் போது தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கணினி செயல்படாது என அறிவிப்பு வருகிறது.

இதனால் அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மாத ஊதியம் மென்பொருள் சரி செய்யப்பட்ட பிறகு தாமதமாக வழங்கப்படும் என்றும் அரசு தரப்பு சார்பாக கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.