தயாரிப்பாளர் பாஸ்கரன் திருமணத்தில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சியின் போது தனுஷ் சிவகார்த்திகேயனை கட்டி அணைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். சிவகார்த்திகேயன் மனைவியிடமும் தனுஷ் நலம் விசாரித்தார். தனுஷுக்கு சிவகார்த்திகேயனுடன் பிரச்சனை இருப்பதாகவே சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவிடப்படுகிறது. மெரினா திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

தனுஷும் அடுத்தடுத்த படத்தில் நடிப்பது, இயக்குனர் அவதாரம் என பிஸியாகிவிட்டார். சிவகார்த்திகேயனுக்கு ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் உறுதுணையாக இருந்தவர் தனுஷ். அதன் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பேசிக் கொள்வதே இல்லை என சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனோ, தனுஷோ பேசி விட்டால் ஒருவரை ஒருவர் தான் விமர்சித்து பேசுகிறார்கள் என நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தனுஷ் சிவகார்த்திகேயனை கட்டி அணைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். இது தொடர்பான போட்டோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.