அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே பாஜகவை ஒழித்த நிலையில் அடுத்ததாக திமுகவை ஒழிக்க வேண்டும் எனவும் விஜய் களத்திற்கு வரவேண்டும் எனவும் கூறினார். அதோடு தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் நாங்கள் ஆட்சி அதிகாரத்தில்  பங்கு கேட்பதில் என்ன தவறு என்று கூறினார். கூட்டணிக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே கூறிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறிய நிலையில் தற்போது அவரிடம் இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஆதவ் அர்ஜுனா இன்னும் கட்சியில் தான் இருக்கிறார் என்றார். அதன்பிறகு நான் கூறியதால் தான் அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதோர் 10 பேர் துணை பொதுச்செயலாளராக இருக்கிறார்கள். மேலும் ஆதவ் அர்ஜுனா இன்னும் கட்சிப் பொறுப்பில் நீடிக்கிறார். அவர் மீது ஒரு முறைக்கு இருமுறை பரிசீலனை செய்த பிறகு தான் நடவடிக்கை என்பது எடுக்கப்படும் என்று கூறினார்.