இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் ஃபேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது தனது காரில் இருந்து இறங்கி டவுனிங் தெருவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதில் அக்ஷதா மூர்த்தி லட்சக்கணக்கான மதிப்புள்ள JW Anderson என்கிற ஆடம்பர செருப்பை அணிந்துள்ளார். இந்த செருப்பின் விலை சுமார் 570 பவுண்டுகள் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.