தமிழகத்தில் நாளை அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ரேஷன் கார்டு தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற இருக்கிறது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் போன்ற சேவைகள் வழங்கப்பட இருக்கிறது.

அதோடு ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் பெற முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்றும் வழங்கப்பட உள்ளது. மேலும் இதன் காரணமாக நாளை இந்த சிறப்பு குறைதீர் முகாமினை பயன்படுத்தி ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.