கலைஞர்க்கு நாளை முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தி கலைஞர் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார்.
கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை (ஆகஸ்ட் -7) அனுசரிக்கப்படுகிறது . கலைஞர் மறைவு எய்தி நாளையுடன் ஓராண்டு ஆகிறது . இந்நிலையில்அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் நாளை காலை 8 மணிக்கு முக ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடை பெற உள்ளது . ஊர்வலத்தின் நிறைவாக மெரீனாவில் உள்ள கலைஞர் நினைவகத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர் .

மாலை 5 மணிக்கு திமுக நாளேடான முரசொலி அலுவலகத்தில் கலைஞர் அமர்ந்த நிலையில் எழுத்து ஓவியம் தீட்டுவது போன்ற சிலை திறக்கப்படவுள்ளது .சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி திறந்து வைக்கிறார் .இதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் கலைஞர் உருவ சிலை திறப்புவிழா பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஓய் எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. வீரமணி தலைமையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா , புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பேசுகின்றனர் . திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசுகிறார் .