பிரபல டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக சொல்லப்படுகிறது. சீனிவாச மூர்த்தி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். சூர்யா, அஜித், மோகன்லால், ஷாருக்கான், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியவர் ஸ்ரீனிவாச மூர்த்தி. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.