உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் எட்டு வயது சிறுவன் கொலை செய்யப்பட்டார். சிறுவனை கொடூரமாக கொன்ற அவரது தாய் மற்றும் மாமாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனின் தாய் மாமாவிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சிறுவனின் தாயும் அவரது மாமாவும் தகாத உறவில் இருந்தனர்.
சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் நெருக்கமாக இருப்பதை எட்டு வயது சிறுவன் பார்த்து விட்டான். இதனால் சிறுவனை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் உடலை மூன்று நாட்கள் மொட்டை மாடியில் வைத்திருந்தனர். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் மகனை கொலை செய்த தாய் மற்றும் அவரது தாய் மாமாவை கைது செய்தனர்.