பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் முகாமாக மாற்றப்பட்டுள்ள  17 பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் 5-ஆம்  தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.