தமிழ்நாடு போலீஸ் டிஜிபி உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்த 32 மனுதாரர்கள் மீண்டும் புகார் மனு கொடுத்துள்ளனர். அதேபோல் புதிதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 40 பேரும் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 72 பேர் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.