புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா விழாவில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது முக்கிய பிரமுகர்கள் பல பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இதனையடுத்து நாடாளுமன்றம் செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது, புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஒவ்வொரு நாட்டின் நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சி பயணத்திலும் அழியாத சில தருணங்கள் வருகிறது.
மே 28 அத்தகைய நாளாகும். புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும். மேலும் இந்த புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல 140 கோடி இந்திய மக்களின் இலட்சியத்தின் சின்னம். இது ஒரு இந்தியாவின் உறுதியை பற்றிய செய்தியை உலகிற்கு வழங்குகிறது. புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்த புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும் அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தான் உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. இந்த புதிய நாடாளுமன்றம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.