தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் முத்து, நாட்டாமை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் ஒரு குணச்சித்திர நடிகராகவும் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் திடீரென காலமானார்.
இந்த தகவலை அவர் தன்னுடைய எக்ஸ் தல பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக காலமான நிலையில் இன்று மதியம் 2:30 மணியளவில் இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.