பிரதமர் மோடி இடம் காங்கிரஸ் எழுப்பி 9 கேள்விகள் பொய் மூட்டை… பாஜக குற்றச்சாட்டு…!!!!!

பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி நிறைவு பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, இந்தியாவின் நிலம்  காங்கிரஸ் ஆட்சியின் போது தான் சீனாவால் பறிக்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் அண்டை நாட்டுடன் மோதல் வெடித்த போது நாடு தைரியத்தை காட்டியது. மோடி ஆட்சி காலத்தில் எல்லை உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே  மோசமான நிலையில் வைத்திருந்தது. கடந்த இரண்டு பொது தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டது. கொரோனா தொற்று மோசமானதாக நிர்வகிக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது வெட்கக்கேடான செயல்.

சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அரசை விமர்சியுங்கள் நாட்டின் முடிவை ஏன் பலவீனப்படுத்துகிறீர்கள் காங்கிரசாரின் விமர்சனம் சுகாதாரப் பணியாளர்களையும் நாட்டை பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றியவர்களையும் அவமதிப்பதாகும். அதே போல் பாஜக ஆட்சிக்கு வந்த போது இந்தியாவின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர். பாஜக ஆட்சிக்கு வந்த பின் தற்போது அது 3 1/2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு ரூ.50 லட்சம் கோடிக்கும் அதிகம். சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதம் உற்பத்தி துறையில் இந்தியா 99 சதவீத செல்போன் தேவையை சந்திக்கிறது. 2014ஆம் ஆண்டு 78% இறக்குமதி தான் செய்யப்பட்டது.

அதேபோல் விவசாய உற்பத்தி பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தப்பட்டது. மேலும் 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.87 லட்சம் கோடி ஆகும். 312 திட்டங்கள் மூலமாக பயனாளிகளுக்கு ரூ.6.68 லட்சம் கோடி வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தரகர்களுக்கு போகிற 2.70 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிகள் எழுப்பி உள்ள கேள்விகள் பொய் மூட்டை ஏமாற்றமாலை 9 கேள்விகளும் விமர்சனத்தின் அடிப்படையில் எழவில்லை அவை மோடி மீதான நோய் இயல் வெறுப்பினால் எழுந்தவை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply