பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாவுக்கு பதிலாக நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார். அதன் அனுபவம் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். சில தினங்களுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பு காரணமாக அவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு பதிலாக நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார். அதன் அனுபவம் பற்றி அவர் கூறியதாவது: “இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை, அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. சினிமாவில் நடித்ததோடு சரி தெலுங்கிலும் சரளமாக பேச வராது.

அங்குள்ள போட்டியாளர்களை எப்படி கையாளுவது என்று எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால் நாகார்ஜுனா உன்னால் முடியும் என்று தைரியம் சொல்லி என்னை அனுப்பி வைத்தார். அங்கு எனது மைத்துனர் அகில் வந்து இருப்பதை பார்த்ததும் நான் சகஜமா நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு பலரும் என்னை பாராட்டினர். இப்போது என்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.