ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஆற்றங்கரையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணின் காதலனான 19 வயது வாலிபரை கைது செய்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அந்த வாலிபர் தனது காதலியை ஆற்றங்கரையில் சந்தித்துள்ளார். அப்போது உடலுறவு கொள்ளலாம் என வாலிபர் அழைத்துள்ளார். அதற்கு அவரது காதலி மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த வாலிபர் கான்கிரீட் ஸ்லாப்பால் இளம் பெண்ணின் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..