மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காருசேரி கிராமத்தில் அருள்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருள் விருதுநகர்-சிவகாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து அருள் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.