நாளை உள்ளூர் விடுமுறை …கேட்ட வரங்களை அருளும் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் ஆடி பெருந்திருவிழா !!..

சேலத்தில் ஸ்ரீ  கோட்டை  மாரியம்மன்  கோவிலில்  ஆடி  பெருவிழாவையொட்டி  நாளை  உள்ளூர்  விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது .

சேலத்தில்  புகழ்பெற்ற  கோட்டை  ஸ்ரீ  கோட்டை  மாரியம்மன்  கோவிலில்  ஆடி  திருவிழா  கடந்த  மாதம்  பூச்சாற்றுதளுடன்  தொடங்கியது . இதையொட்டி  பக்தர்கள் அலகு குத்தி  100அடி  உயரத்தில்  பறந்தவாறும்  நேர்த்திக்கடனை  செலுத்தினர் .மேலும்  பக்தர்கள்  மேளதாளத்துடன் ஊர்வலமாக  சென்று  அம்மனை  வழிபட்டனர் .

நாளை  ஆடி  பெரும்  திருவிழாவின்  முக்கிய  நிகழ்வான  பொங்கல்  வைக்கும்  விழா  நடை பெற  இருப்பதால் சேலம்  மாவட்டத்திற்கு  உள்ளூர்  விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும்  பக்தர்கள்  கத்தி அலகு , குதிரை  அலகு ,வாய்  அலகு ,தொடையில்  குத்தும்  அலகு மற்றும்  முதுகு  அலகு  என  32 வருடமாக  நேர்த்திக்கடன்  செலுத்துவதாகவும்  அம்மனின்  அருளால்  எந்தவித  இடையூறும்  ஏற்படவில்லை  என  பக்தர்கள்  தெரிவிக்கின்றனர் .