இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், பேஸ்புக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோவை வைத்து மஞ்சுளா என்பவர் ஐதராபாத்தை சேர்ந்த பரசுராமா என்பவரை ஏமாற்றியுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுளா அவருக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். இது நடிகை என்பதுகூட தெரியாமல் அவரின் ஆசை வார்த்தையில் வீழ்ந்த பரசு =40 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். ஒரு கட்டத்தில், இது பேக் அக்கவுண்ட் என்பதை அறிந்து அவர் புகார் கொடுக்க, போலீஸ் மஞ்சுவை கைது செய்துள்ளது.