
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 59,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்த நிலையில், 2 நாட்களில் ரூ.880 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதன் பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8127 ரூபாயாகவும், ஒரு சவரன் 65,016 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 104 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 4000 ரூபாய் ஆகவும் இருக்கிறது.