கலிபோர்னியாவின் ஓரோவில்லில் உள்ள ஃபெதர் ரிவர் என்ற தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்த நிலையில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக அருகில் இருந்த தேவாலயம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். கலிபோர்னியா அதிகாரிகள் கூறுகையில் பள்ளிக்கும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் தொடர்ந்து அந்த நபர் பற்றி விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.