திருச்செந்தூர் கோவிலில் உள்ள யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பாகனின் உறவினர்கள் யானையுடன் நீண்ட நேரமாக செல்பி எடுத்ததால் கோபத்தில் அந்த நபரை மிதித்த நிலையில் அதனை தடுக்க சென்ற பாகனையும் மிதித்தே கொன்றது. இந்நிலையில் உயிரிழந்த யானை பாகன் உதயகுமாருக்கு திமுக அரசு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில் அவருடைய மனைவிக்கு தற்போது கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான அரசு வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிக்கான ஆணையை திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று வழங்கினார். மேலும் பாகனை யானை மிதித்து கொண்ட நிலையில் ஒரு வாரமாக அந்த வேதனையை நினைத்து யானை சாப்பிடாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.