திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் ராஜினாமா!

திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் 29ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகும் துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

துரைமுருகன் விலகலை தொடர்ந்து திமுகவின் அடுத்த பொருளாளர் யார்? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது பொருளாளர் பதவிக்கான போட்டியில் எ. வ. வேலு, கே. என். நேரு, ஆ. ராசா, பொன்முடி உள்ளனர். திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விரும்புவதால் பொருளாளர் பதவியிலிருந்து விலகினார் என தகவல் வெளியான நிலையில், தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். வரும் 29ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்பதால் திமுக தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.