![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/5ab881b8-25bb-4e6f-8416-d5350ded3df7.jpg)
பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது பாறை ஒன்று கனமழையின் காரணமாக உருண்டு சரிந்து விழுந்தது.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மீது பாறை உருண்டு விழுந்தது. அந்த வீட்டில் 7 பேர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட எஸ்பி சுதாகர் ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த மண்சரிவில் தற்போது 3 வீடுகள் பூமிக்குள் புதைந்து சேதம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த வீட்டிலிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கியுள்ளனர். அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் மழை காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வீடுகளை முழுவதுமாக மணல் மூடியுள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டில் கிட்டத்தட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 7 பேர் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளதாக நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.