தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்குகின்றார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு கலையரங்கத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு புது உத்வேகத்துடன் பேசி இருக்கின்றார்.
அவர் பேசியுள்ளதாவது, ரசிகர்கள் இனி எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனிமே நான் என்ன செய்யறேன்னு மட்டும் பாருங்க. நான் தமிழ் சினிமாவையும் தமிழ் மக்களையும் பெருமைபடும் வகையில் நிச்சயம் வருவேன். என் ரசிகர்களை இனிமேல் தலை குனிய விடமாட்டேன் என உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.