தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக ஜூன் மாதம் இரண்டாவது வாரம் வரைக்கும் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது திருச்சி மற்றும் திருவனந்தபுரம் வரை செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணமாக ரூ.2700 வரை வசூலிக்கப்படுவதாகவும், கோவை ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.1400 லிருந்து 2000 ரூபாய் வரைக்கும், தூத்துக்குடி மற்றும் கொச்சிக்கான டிக்கெட் ரூ.3000 வரைக்கும் வசூலிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை செல்வதற்கான விமான முன்பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும் சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.8000 வரையிலும், சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.5000 வரை வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மும்பை, டெல்லி, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான கட்டணமும் பல மடங்காக உயர்த்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.