தஞ்சை மாவட்டத்தின் அருகே வல்லம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த  கூலி தொழிலாளி ராஜேந்திரன் (45)  தனது 16 வயது மகளை கடந்த 2021-ம் ஆண்டில் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததால், வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்  கொடுக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில்,  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதனை விசாரித்த  நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சசிரேகா சிறப்பாக வாதாடியுள்ளார்.