பிபிசி பஞ்சாபி செய்தி நிறுவனத்தின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத தலைவராக உருவெடுத்திருக்கும் அம்ரித் பால் சிங்-கிற்கும் அவரது பஞ்சாபி அமைப்புக்கும் எதிராக பஞ்சாப் போலீசார் அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
அம்ரித் பால் சிங்-கை போலீசார் தேடி வரும் நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த பத்திரிகையாளர்கள் செய்தி நிறுவனங்களில் twitter கணக்குகளை பஞ்சாப் அரசு முடக்கி வருகிறது. இந்த நிலையில் சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று பிபிசி பஞ்சாபி செய்தி நிறுவனத்தின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.