உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னையா பகுதியில் கோவிந்த்-சரிதா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து வயதுடைய மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சரிதாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த நபருடன் சரிதா அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கோவிந்த் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன் பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தந்தை இறந்தது தெரியாமல் 5 வயது மகள் அங்கேயே நின்றால் அழுது கொண்டிருந்தாள். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற கணவன் மனைவியின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.