ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கி கடந்த 5 மாதங்களாக கூலி வேலை செய்துவருபவர்கள் மாலிக் (35), சபிதா (28) தம்பதி. சுட்டெரிக்கும் வெயிலால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால், தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என சபிதா அடிக்கடி தனது கணவரிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சபிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெயிலின் தாக்கத்தால் சபிதா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.