திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரிய தாழை ஜார்ஜ் மைக்கேல் நகரில் லிவிங்ஸ்டன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீனவர் ஆவார். இந்நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லிவிங்ஸ்டனை கைது செய்தனர்.