காண்டிராக்டருக்கு 15 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் காண்ட்ராக்டரான பிச்சைமாரி(45) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிச்சைமாரி அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பிச்சைமாரியை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிச்சைமாரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 15 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.