
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம் எஸ் ஷா மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மாநில பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிறுமியின் தாய் எம் எஸ் ஷா-வுக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் அவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.