பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ராந்த் மாஸ்ஸி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு லூட்டோரோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் ரன்வீர் சிங் மற்றும் சோனாக்ஷி சின்ஹா முதன்மை வேடத்தில் நடத்திருந்தனர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஏ டெத் இன் தி கன்ச் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு ஜின்னி வெட்ஸ் சன்னி, ஹசின் தில்ரூபா, லவ் ஹாஸ்டல் போன்ற திரைப்படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் 12த் பெயில் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்து பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது ‌ 2025 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது அவர் யார் ஜிக்ரி மற்றும் ஆன்கோன் கி குஸ்தாகியான் ஆகிய இரு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு 2025 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது 2025 ஆம் ஆண்டு கடைசியாக ஒருவருக்கு ஒருவர் சந்திப்போம் என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.