கொடூரம்… ஒட்டல் அதிபர் துண்டு துண்டாக வெட்டி கொலை… பெரும் பரபரப்பு…!!!!!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் திருவூர் நகரில் சித்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் கோழிக்கோடு எத்தி பாலம் அருகே சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென சித்திக் மாயமாகியுள்ளார். இது குறித்து சித்திகின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சித்திக்கின் ஏடிஎம் கார்டு காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து சித்திக்கின் வங்கி கணக்கு ஆய்வு செய்தபோது அதிலிருந்து பெரிய அளவில் பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பணத்திற்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகத்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடக்கி விட்டனர். இந்நிலையில் பாலக்காடு அருகே அட்டப்பாடியை அடுத்த அகழி வனப்பகுதியில் நேற்று காலை பெரிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதில் ஆண் ஒருவர் வெட்டப்பட்டு உடல் துண்டு துண்டாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அந்த பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அது ஹோட்டல் அதிபர் சித்திக் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து போலீஸர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சித்திக்கின் ஹோட்டலில் வேலை செய்து வந்த சிவில் மற்றும் பர்ஹானா ஆகியோர் மாயமானதும் தெரிய வந்தது. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பான விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது கடந்த 18ஆம் தேதி சித்திக் அவர்கள் இரண்டு பேரையும் திடீரென வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. அந்த கோபத்திலும் அவரிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவும் சித்திக்கை அவர்கள் கடந்த 23ஆம் தேதி கடத்தி சென்று கோழிக்கோடு அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின் அங்கு வைத்து அவரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து அடைத்தனர். இதனையடுத்து காரில் சென்று வனப்பகுதியில் வீசி சென்றதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் இவர்களுக்கு உடந்தையாக பர்ஹானாவின் தம்பி ஆசிக்கும் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைதான மூன்று பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply