
வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதாகும் நிலையில் டாக்டராக இருக்கிறார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக மணிகண்டன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் படுக்கையறையில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.
இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதாவது மனைவியை பிரிந்த வேதனையில் அவர் விஷ ஊசி ஏற்றிய குளுக்கோசை உடம்பில் செலுத்தி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.