திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கே கிருஷ்ணாபுரத்தில் செல்வராஜ்  அபிநயா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அபிநயா நேற்று  திடீரென வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் கதறி அழுதார். இது தொடர்பாக உடுமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ  இடத்திற்கு சென்று அபிநயா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து செல்வராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய காதல் மனைவி இறந்த தூக்கத்தை தாங்க முடியாமல் சில மணி நேரத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இவருடைய சடலத்தையும் மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 9 வயதில் சிவிகா என்ற மகளும், 6 வயதில் சர்வேஸ் என்ற மகனும் இருக்கும் நிலையில் குழந்தைகள் இருவரும் தற்போது தாய் தந்தையை இழந்து பரிதவிப்பில்  இருப்பது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.