கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜுக்கு சொந்தமான ஆடு பழனியாண்டி என்பவரது விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
இதனையடுத்து கிணற்றுக்குள் இருந்து ஆடு கத்தும் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஆட்டை பத்திரமாக மீட்டனர்.