ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது காரை எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அங்கு வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வத்தை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பன்னீர்செல்வம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.