“காங்கிரஸ் ட்விட்” வீர சாவர்க்கர் குறித்து விசாரியுங்கள்…. மும்பை நீதிமன்றம் அதிரடி…!!

இந்துத்துவா அமைப்பின் தலைவர் வீர சாவர்க்கர் குறித்து ராகுல் மற்றும் சோனியா கூறிய கருத்து பற்றி விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீர சாவர்க்கரை துரோகி என்று குறிப்பிட்டு இருந்ததாக அவரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கருணை கூறியதாகவும்,

Image result for வீர் சாவர்க்கர்

அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட போது பிரிட்டிஷ் அரசின் அடிமையாக இருக்க விரும்புவதாக வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதாக அந்த ட்வீட்டில் கூறப்பட்டிருந்தது. இந்த பதிவு சாவர்க்கரின் புகழை குறைக்கும் விதமாக இருப்பதாக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து சிவாஜி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.