கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், விலை சரிந்ததால் கவலை அடைந்துள்ளனர் .
கிருஷ்ணகிரி அணையின் மேற்புறம் உள்ள விவசாயிகள் கத்தரிக்காய்,முள்ளங்கி , தக்காளி வெண்டைக்காய், ஆகிய காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர் . இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய் ஓசூர் சந்தை மூலமாக கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யபடுகின்றன .

விவசாயிகள் கத்தரிக்காய் கிலோவுக்கு 20 ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர் .ஆனால் விளைச்சல் அதிகமாக இருப்பதால் கிலோ 15 ரூபாக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது . இதனால் அவர்கள் எதிர் பார்த்த இலாபம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதன் மூலம் நஷ்டத்தை சரிகட்டலாம் என நம்புகின்றனர் .மேலும் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் இலாபம் ஈட்ட முடியும் என கவலையுடன் கூறுகின்றனர் .