கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தியா(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு அனிஷ் (5) என்ற மகனும், கோபிகா (2) என்ற மகளும் இருக்கின்றனர். மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

நேற்று காலை அன்பழகன் நித்யாவிடம் கூறாமல் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த நித்தியா தனது மகன் அனிஷ், மகள் கோபிகா ஆகியோருடன் அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரில் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.