புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் அறை இருக்கிறது. இந்நிலையில் இங்கே எடுக்கும் எக்ஸ்ரே படத்தை மருத்துவமனை பணியாளர்கள் காய வைக்காமல் அப்படியே பொதுமக்களிடம் கொடுத்து விடுகின்றனர். நீங்களே காய வைத்துக் கொள்ளுங்கள் என அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் எக்ஸ்ரே படத்தை காய வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.